தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Thursday 22 September 2016

உருத்திராட்சம்

RUDRAKSHAM

உருத்திராட்சம்

இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உத்திராட்சம்

ஓர் அபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆய்ச்சியாளர்களால் ஒப்புக்ள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

மன அழுத்தம் குறைய , மன உளைச்சல் நீங்க, இரத்த அழுத்தம்

குறைய ,நோய்கள் நீங்க இந்த உருத்திராடச மாலை அணிவது நல்லது.

தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் கொள்ளலாம்

38 வகையான உத்திராட்சத்தில் , 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப்

பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வருசைப் படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு முகத்திற்கும் பலன் உண்டு.


[ ஒருமுகம் உருத்திராட்சம் கிடைப்பது மிக அபூர்வம். நான் நேப்பாளம் சென்றிருந்த போது ஒரு முக உத்திராட்சம் முதல் பதினாறு முகம் கொண்ட உத்திராட்சம் கண்டேன். இதில் ஒரு முக உத்திராட்சம் [சிறியது] மூன்று இலட்சம் நேப்பாள ரூபாய் வரை

விலை சொல்லப்பட்டது.]

ஒரு முகம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்க பூண் போட்டு பத்திரப்

படுத்தியிருப்பார்கள். பல தலைமுறையாக காத்து வைத்திருப்பார்கள். அதை

வைத்திருந்தால் குடும்பத்தில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சில குழந்தைகள் 3 - 4 வயது வரை பேசாது இருப்பார்கள் அல்லது

சரிவர சொற்கள் வராது இருப்பார்கள். அந்த மாதிரி குழந்தைகளுக்கு

இந்த உத்திராட்ச மணியினை 48 நாட்கள் உராய்த்து நாவில்

தடவி வந்தால் சரியான பேச்சு வரும் [ அனுபவ உண்மை]


ஒரு முகம் [ ஏகமுக] உத்திராட்ச சிவன் என்பர். இதனை அணிந்தால்

பிரம்ம வாதன பாவம் நீங்கும் என்பார்கள்.


இருமுக உத்திராட்சத்தினை சிவ சக்தி - கவுரி சங்கர் என்றும்

சொல்வார்கள். இரு முக உத்திராட்சம் , மந்திரதந்திர சக்தி கொடுக்கும் - கொலைப் பாவம் போம்.


மும்முகம் அனலைக் குறிக்கும். வினை தீரும், அதிர்ஷ்டத்தையும்

கொடுக்கும் என்பர்.


நான்முகம் அதிதெய்வம். பாவம் தீரும் , எதிர்பாலிரை ஈர்க்க உதவும்.


ஐம்முகம் தீங்கு தீரும், பிரச்சனைக்கும் தீர்வு காணும்.


ஆறுமுக உருத்திராட்சத்திற்க்கு அதிபதி ஆறுமுகனே. பிரவதை பாவ

நிவர்த்தியையும் கொடுக்கும்.


ஏழு முக உருத்திராட்சத்திற்கு ஈசன் நாகேசன் ; அபாயத்திலிருந்து காக்கும்.


எட்டு முக உருத்திராட்சத்திற்க்கு உரியவர் விநாயகர்; திருட்டுக் குற்ற பாவம் தீரும்.


ஒன்பது முக உருத்திராட்சத்திற்க்கும் தெய்வம் வயிரவன்; இதை அணிந்தால்

கொலைப் பாவம் தீரும்.


பத்து முகத்திற்கு பதி அரி ; இதனை அணியின் பேய் அஞ்சி நீங்கும். பதினொன்று

[ ஏகாதாச ] இறை உருத்திரர் ; இதை பூண்டவர்க்கு விக்கினம் நீங்கும்.


பன்னிரு முழ்கத்திற்க்கு தேவர் தித்தர் ; ஊறுங்கள் போம் எண்ணங்கள் நிறைவேறும்.


பதின் மூன்று முக உத்திராட்சத்திற்கு தெய்வம் பரமசிவன்; இதனை தலையில்

அணிந்தால் முக்தி உண்டு


பதினாங்கு முக உத்திராட்சம் ருத்ர நேத்திரத்திலிருந்து உண்டானது.

இதை அணிந்தால் எல்லா வியாதிகளும் போய் எப்போதும்


இப்படி ஒவ்வொரு முகத்திற்க்கும் ஒவ்வொரு பலனாக உள்ளது உருத்திராட்சத்தை 3,4,5,6, எண்ணிகையில் வளையமாக கோர்த்து அணிவர்,

கழுத்தில் அணியும் மாலைகள் 27 , 54 , 108 என்ற கணக்கில் இருக்கும்.

கழுத்தில், கையில் அணியும் உத்திராட்சம் அங்குபங்சர் போல் செயல் பட்டுபயனளிக்க கூடியதாம்.

ஆரம்ப இந்தோஷியாவில் விளைந்த இது இப்போது நேப்பாளத்திலும், ஹரித்துவாரிலும் பயிராகிறது.

நேப்பாளத்தில் பசுபதிநாத் கோயிலில் உத்திராட்ச மரம் ஓரளவு நன்கு வளர்ந்த மரத்தினை பார்த்தேன். ஆனால் காய்கள் இல்லை.

அபூர்வமான இந்த உருத்திராட்சத்துக்கு கிராக்கி அதிகம். இதன் மகிமை உணர்ந்து,

மரத்திலால் செதுக்கிய போலிகளும், அரக்கினால் உருக்கிய போலிகளும் விற்பனையில்

நிறைய உள்ளது. உருத்திராட்சம் வாங்கினால் அது குறித்து அறிந்தோர்,

விபரம் அறிந்தோர் மூலம் வாங்கவும். போலியா , நிஜமா என்று அறிய அதனை தண்ணீர் போடவும்.

மூழ்கினால் அசல், மிதந்தால் நகல் !

மந்திரமும் எண்ணும் :

" ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,

தற்புற மந்திரத்தால் ' செவியொன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;

கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க;

உரத்தில்[மார்பில்] 49 அணிக;

தோள்களில் 16ம் அணிக ;

மதரத்து 12 ம் அணிக;

பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்

மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;

இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]

விதிமுறைகள் / நியமம்:

உத்திராட்சம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.

உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும்.

உரையாடுவதில் , பேச்சில் இனிமை வேண்டும். கடுமையான

கீழ்தரமான சொற்களை/ வார்த்தைகளை நீக்க வேண்டும்.

மதுவை ஒழித்தல் வேண்டும்.

மணி அளவு:

பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பி பூணுகிறார்கள்.

ஏனினும் ' உத்திராக்க விசிட்டம் ' என்னும் நூலில் எந்த அளவு உத்திராட்ச மணி

சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.

நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமானது ;

இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;

கடலை அளவுடையது அதமம்.

இதனை பின் வரும் வெண்பா ;

" உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;

மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு

இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;

பாசவிதம் பாற்ற நினைப் பார். "

செபமாலைக்குரிய மணிகள்:

இரண்டு முகமுடையதும் மூன்று முக உடையதும் செபமாலைக்கு உரியதுஅன்று ;

பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.

இதனை கூறும் பாடல் :

இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது

இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனே

பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;

மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.

செபத்துக்குரிய விரல் :

அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம்,

மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும்,

கனிஷ்டையால் இரட்சைணையும் .

[அங்குஷ்ட: கட்டை விரல் ; தர்ச்சனி ள்காட்டி விரல்;

மத்திமை : நடு விரல் ; அனாகிகை : மோதிர விரல் ;

கனிஷ்டை : சுண்டு விரல்.]

செபிக்கும் ஒலி:

செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.

மானதமாக உச்சிப்பது உத்தமம் ;

மானதம் முத்திக்கு ஏது ;

மந்தம் புத்தி சித்திக்கும்;

இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.

1008 செபித்தல் உத்தமம்;

அதிற்பாதி மத்திமம்;

108 செபித்தல் அதமம்

"வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க;

தனாது குருவும் அதனைக் காண்டல் கூடாது ' என்பது விதி.

செபிக்கும் காலம் உத்திராட்ச மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக்

கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ணுக;

செபமாலை அறுந்து வீழின் , குறைவற முன்போல் கோவையாக்கி,

முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க.

பொது:

சிவபக்தருக்குக் உத்திராட்ச தானம் செய்வது சிறப்புடையது.

உத்திராட்சம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம்.

மேற்கண்டபவைகளை கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி

அருளிய ' உத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.

திருவாடுவடுதுறை தீனம் 1954- ல் வெளியீடு.

அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச்

சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட

மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். இதன் பொருள் " மும்மை "

என்பது உத்திராட்சம் , ஜடை , திருநீறு .இந்த மூன்றையே உண்மைப்

பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.

பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும்

உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும்

அறியவரும்.திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன் ,

வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில்

கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தை கட்டினான்.

காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலை கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின்

தந்தையாகிய பரமேசுவரவர்மன் மாகபலிபுரத்தில் ' கணேசர் ' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.

இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்கள் கல் வெட்டியில் இருக்கிறது. அவை அரசனுக்கும்

சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலோடையாக உள்ளது. அதில் இரண்டாவது ஆறாவது

சுலோங்கள் அவ்வரசன் உருத்திராட்ச மணிகளாலாய சிவலிங்கத்தைத் தலைமுடியாகஅணிந்தவன் என்று அறியவருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது கண்கூடு ; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில்

" முத்து விதானம் " அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர்.இங்கு கண்ட முத்து உருத்திராட்ச

மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில்

"அமைய வேண்டுவது ' உத்திராட்ச விதானம் ' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி

நந்தித் தம்பிரான் சுவாமிகள் பலசிவ தலங்களில் அமைக்க உதவினார்.

அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.

[நேப்பாளத்தில்] காட்மண்டில் பதிபதிநாத் கோயிலிலும் காணலாம்.காரைகுடிக்கு அருகில்

இருக்கும் பிள்ளையார் பட்டியிலிருக்கும் விநாயகர் கோயிலில் [உரித்த தேங்காய்] அளவு

உத்திராட்சம் இருப்பதாக பலர் சொல்ல கேட்டுயிருக்கிறேன்

"நெக்குளார்வ மிகப் பெருகி நினைந்தக்கு

மாலை கொண்டங்கை யிலெண்ணுவார்

தக்கவானவராய்த் தகுவிப்பது


நக்க நாம நமச் சிவாயவே " - சம்பந்தர்.

No comments:

Post a Comment